×

பிளாட்டில் துர்நாற்றம் வீசிய நிலையில் மராத்தி நடிகரின் சடலம் மீட்பு: மர்ம மரணம் குறித்து விசாரணை

மும்பை: பிளாட்டில் வசித்த நடிகர் ரவீந்திர மகாஜனியின் சடலம் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல மராத்தி நடிகர் ரவீந்திர மகாஜனி (74), கடந்த சில மாதங்களாக தலேகான் தபாதேவில் உள்ள பிளாட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் வசித்த பிளாட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தலேகான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து பார்த்த ேபாது, நடிகர்ரவீந்திர மகாஜனி இறந்த நிலையில் கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த போலீசார், ரவீந்திர மகாஜனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரவீந்திர மகாஜனியின் திடீர் மரணம் மராத்தி சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ரவீந்திர மகாஜனியின் மரணம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் நடந்திருக்க வாய்ப்புள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு மகாஜனியின் உடல் ஒப்படைக்கப்படும். தற்ேபாது மும்பையில் வசிக்கும் மகாஜனியின் மகனும், நடிகருமான கஸ்மீருக்கு தகவல் ெதரிவித்துள்ளோம். மர்ம மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

The post பிளாட்டில் துர்நாற்றம் வீசிய நிலையில் மராத்தி நடிகரின் சடலம் மீட்பு: மர்ம மரணம் குறித்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Rawindra Mahajany ,Plat ,Platt ,
× RELATED மும்பையில் தனது குடும்பத்தினருடன்...